திருத்தொண்டர் புராணம் - 63 நாயன்மார் வரலாறு

நற்றுணையாவது நமச்சிவாயவே !!
கயிலையின் கண், கண்ணுதலோன் எண்ணிய வாங்கு திண்ணிய மனத்தவராய், அணுக்கத்தொண்டராய் அருள் பெற்ற, சுந்தரர் இறைவனார் திருவுளத்தால் விண்ணுலகினின்றும் மண்ணுலகில் அவதரித்தார். மன்றுளாரை முன் துதிசெய்து நலம்பெற்ற அடியார் பெருமக்கள் அறுபத்துமூவரின் சீரும் சிறப்பும் பார்முழுதும் தெரிந்துக்கொள எண்ணியே சுந்தரரின் மண்ணுலக அவதாரத்திற்கு இறையருள் கூடிற்று.
இவ்வடியார் பெருமக்களை அகிலத்திற்கு அறிமுகப்படுத்தியதே ஆலமுண்ட கண்டன், ஆதிரை அண்ணல், அப்பன் சிவபெருமான் தான்.
“தில்லைவாழ் அந்தனர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று முதலடி எடுத்துக் கொடுத்ததே முதற் பொருள்தான். அது தொடங்கி ஆலால சுந்தரரும், அறுபத்து மூவரின் மாண்பினையும் 9 தொகையடியார்களின் சிறப்புகளையும் மண்ணுலகு, உணர்ந்து ஒளிர்ந்து உய்யுமாறு பாடியருளினார்.
அம்பலவாணன் அடியெடுத்துக் கொடுத்த தில்லைவாழ் அந்தணர் தொடங்கியே இப்பெருங்கதை விரிகிறது…
தொகுப்பாளர் :- ஆன்மீகச் செம்மல், சிவ சு. நாகராஜன் தலைவர், சேக்கிழார் அறநெறி இயக்கம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
முன்னுரை
01. தில்லைவாழ் அந்தணர் வரலாறு
02. திருநீலகண்ட நாயனார் வரலாறு
03. இயற்பகை நாயனார் வரலாறு
04. இளயான்குடி நாயனார் வரலாறு
05. மெய்பொருள் நாயனார் வரலாறு
06. விறன்மிண்ட நாயனார் வரலாறு
07. அமர்நீதி நாயனார் வரலாறு
08. எறிபத்த நாயனார் வரலாறு
Latest UPDATES
Thevaram
The Thevaram( 1st to 7 Thirumurai)( literally means God's garland) of Appar, Sundarar and Sambandar sing praises of God, in flawless poetical structure, and countless imageries. These songs are like mantras that can shower great blessings such as good married life.